பயிர் பாதுகாப்பு :: பீட்ரூட் பயிரைத் தாக்கும் நோய்கள்

இலைப்புள்ளி நோய்: செர்கோஸ்போரா பெட்டிகோலா

அறிகுறிகள்:

  • பொதுவாக இலைப் பரப்பில் தோன்றும். அதிக ஈரப்பதம் இந்த நோய் பரவுவதற்கு சாதகமாகும்.
  • இலையின் மேற்பரப்பில் எண்ணற்ற சிறிய வட்டவடிவ புள்ளிகள் தோன்றும். இவை பெரிதாகி, பழுப்பு நிறம் அல்லது ஊதாநிறமாக மாறும்.
  • தனித்தனிப் புள்ளிகள் வட்டவடிவில் காணப்படும் ஆனால் இவை ஒன்றினைந்து இலை முழுவதும் பரவி மடிந்து விடும்.
  • இந்த புள்ளிகள் காய்ந்து தடப்பட்ட துளைகள் போன்று தோன்றும். அதிக தாக்குதலின் போது, இலைப் பரப்பு முழுவதும் பரவி முதிர்வதற்கு முன்னரே மடிந்துவிடும்.
  • இலைகள் மடிவதால், செடியின் மேல்பகுதியில் கோண வடிவிலும் அடிப்புறத்தில் இறந்த இலைகள் கூட்டமாக காணப்படும்.
  • வளரும் பருவம் முழுவதும் இலைகள் உதிர்ந்துவிடும். வேரின் அளவு குறையும். மகசூலும் குறையும். வயதான இலைகள் பொதுவாக பாதிக்கப்படும்.

கட்டுப்பாடு:

  • பாதிக்கப்பட்ட செடிகளை அகற்றி அழிக்க வேண்டும்.
  • பயிர் சுழற்சி முறையை மேற்கொள்ள வேண்டும்.
  • காப்பர் ஆக்ஸி குளோரைடு 10.3% 15 நாட்கள் இடைவெளியில் மூன்று முறை தெளிக்க வேண்டும்.




அறிகுறிகள்

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015